×

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் 23ம் தேதி கூட உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் 23ம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 3ம் தேதி கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா என்பது வரும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் 23ம் தேதி கூட உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery Water Regulatory Commission ,Delhi ,Tamil Nadu, ,Karnataka, ,Kerala ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...